GuidePedia

0

சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

விநாயகர் சதுர்த்தியன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்வோம்.

அதோடு, விநாயகர் ஸ்லோகங்களையும், அவரது திருநாமங்களையும் சொல்லி வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம்.

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது எல்லோராலும் முடியாது. என்றாலும் பரவாயில்லை.
16 நாமாக்கள் கொண்ட எளிய ஸ்லோகம் ஒன்றைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.

அதாவது,

""ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக!!
தூமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!


இந்த ஸ்லோகத்தின் பொருள்

ஸுமுகன் (அழகிய முகம் உடையவர்)

ஏகதந்தன் (ஒற்றைத் தந்தம் உடையவர்)

கபிலர், கஜகர்ணர் (யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர்)

லம்போதரர் (பெருவயிறு உடையவர்)

விகடர் (யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்)

விக்னராஜர் (தடைகளை நீக்குபவர்)

விநாயகர் (தெய்வங்களில் முதல்வர்)

தூமகேது (அழகானவர்)

கணாத்யேக்ஷர் (தேவகணங்களுக்கு அதிபதி)

பாலசந்திரர் ( பிறைநிலா அணிந்தவர்)

கஜானனர் (யானை முகம் கொண்டவர்)

வக்ரதுண்டர்( வளைந்த துதிக்கை உடையவர்)

சூர்ப்பகர்ணர் (அகன்ற காதுகளை உடையவர்)

ஹேரம்பர்( ஐந்துமுகம் கொண்டவர்)

ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு முன் பிறந்தவர்)

இவ்வாறு விநாயகரின் 16 திருநாமங்களைக் கூறி அவரை பூஜித்தால், நாம் வேண்டிய பலனை அடையலாம்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...