
மகாஸ்காந்த புராணத்தின் தொடக்கத்தில் கணபதியின் பதினாறு நாமங்களை வியாசர் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்தத் திருநாமங்களை, கல்வி பயிலத் தொடங்கும்போதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், வெளியில் புறப்படும்போதும், போர்க்களத்திலும், துன்பங்கள் ஏற்படும்போதும் கூறினால், எப்போதும் மங்கலமே உண்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வியாசர். வினை தீர்க்கும் அந்தத் திருநாமங்கள்
ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் - யானைக்காது உடையவன்
லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்
விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்
விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது - தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் - யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.