GuidePedia

0
நலம் தரும் நவநீத விநாயகர்!
அம்பத்தூர் – ஆவடி செல்லும் எம்.டி.ஹெச் சாலையில் பாலிடெக்னிக் பேருந்து நிலையம் அருகில் ஈ.வெ.ரா. நாகம்மை நகரில் அமைந்துள்ளது நவநீத விநாயகர் ஆலயம்.
இங்கே அரச மரத்தின் கீழ் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு நலம் புரிகிறார் நவநீத விநாயகர். கோயிலை சுற்றிலும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலவருக்கு முன்பு பிரம்மா வடக்கு நோக்கி அருள்புரிகிறார்.
விநாயகர் சதுர்த்தி தோறும் நவநீத விநாயகர் பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவது சிறப்பு. காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கே சமீபத்தில் நவகிரகம், சுப்பிரமணியர், ஈஸ்வரர், அம்மன் ஆகிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவலுக்கு 97911 32681.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...