GuidePedia

0

திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில், கோடைகால இலவச தேவாரத் திருமுறை இசைப் பயிற்சி முகாம், மே 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை தானப்ப முதலி தெருவிலுள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில், மேற்கண்ட நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், குடும்பப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் அருளிய அருட்பாக்கள் இசையோடு கற்பிக்கப்படும். பயிற்சியின்போது, நூல்களும், பயிற்சியின் நிறைவில் சான்றிதழும் வழங்கப்படும் என, அறக்கட்டளை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...