
பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன.
அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீய பலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது.
நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
இப்போது களத்திர தோஷத்தைப் பற்றியும் அதற்கான பரிகாரப் பலன்களையும் பார்ப்போம். களத்திரம் என்றால் இல்வாழ்க்கைத் துணையைக் குறிப்பதாகும். களத்திர தோஷம் என்றால் இல்வாழ்க்கையில் அதாவது திருமண வாழ்க்கையில் ஏற்படும் தோஷம் அல்லது தடையைக் குறிப்பதாகும்.
களத்திரகாரகன் அல்லது களத்திரஸ்தானாதிபதி சுக்கிரனாகும். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 7-வது இடம் தான் களத்திர ஸ்தானம். களத்திர தோஷம் ஏற்படக் காரணமாயிருக்கும் கிரகங்கள், கிரக சேர்க்கைகள் எவை என்றால் - லக்கினத்திற்கு 7-இல் அதாவது களத்திர ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை, லக்கினத்திற்கு 7-இல் சுக்கிரன் நீச்சம் பெற்று இருத்தல்,
லக்கினத்திற்கு 7-க்கு உடையவன் 6,8,12-இல் தனித்து இருத்தல், பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருத்தல், லக்கினத்திலிருந்து, 3,7,9-இல் பாபக் கிரகங்கள் இருத்தல் லக்கினத்திலிருந்து 7-க்கு உடையவனின் திசை நடத்தல், 7-இல் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருத்தல், 4-ஆம் இடத்தில் சனி, செவ்வாய்,
ராகு அல்லது கேது சேர்ந்திருத்தல் ஆகும். இதை இன்னும் சுருக்கமாகச் சொன்னால் 7-வது வீட்டிற்கு உரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவக் கிரகங்களின் பார்வை பெற்று இருந்தாலோ அல்லது 6,8-க்கு உரியவனிடம் சேர்ந்து இருந்தாலோ அல்லது 6,8,12-இல் மறைந்து இருந்தாலோ களத்திர தோஷம் என்று அர்த்தம். பொதுவாக, லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களைக் கொண்டு தான்,
ஒருவருக்கு களத்திர தோனூம் இருக்கிறதா, இல்லையா என்று ஜாதகர்கள் முடிவு செய்கிறார்கள். சிலர், லக்கினத்திற்கு ஏழு, எட்டு ஆகிய வீடுகள் காலியாக இருந்தால் சுத்த ஜாதகம் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்லிவிட முடியாது. ஏழுக்கு உடையவனின் வலிமை, சுக்கிரனின் வலிமையை வைத்தே களத்திர ஸ்தானத்தில் தோஷம் உள்ளதா, இல்லையா என்ற முடிவிற்கு வரவேண்டும்.
சில கிரகங்களுக்கு 7-இல் சுப கிரகங்கள் இருந்தாலும், சுக்கிரன் நல்லதல்ல, இதனை "காரகோ பாவ நாஸ்தி'' என்று ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்கினங்களுக்கு 7-இல் புதன், குரு, போன்ற சுப கிரகங்கள் இருந்தாலும், களத்திர தோஷம் இருக்கிறது.
களத்திர தோஷம் இருந்தால், அதனை நிவர்த்தி செய்யாமல் திருமணம் செய்யக்கூடாது. களத்திர தோஷம் இருப்பவர்களுக்கு பொதுவாகத் திருமணம் தாமதமாகும். சிலருக்கு திருமணம் நடப்பதே குதிரைக் கொம்பாகிவிடும். இதனையும் மீறி, தோஷம் இருந்து, திருமணம் நடந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் தோன்றி, திருமண பந்தம் முறியும்.
களத்திர ஸ்தான அதிபதி, களத்திர காரகனான சுக்கிரன் பகைவீட்டில், பகை கிரகங்களின் பார்வையில் இருந்தால், கணவன் அல்லது மனைவியின் பிரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. 7-ஆம் பாவத்தில், சுக்கிரன் அமையும் பொழுது, அதனுடன் சேரும் கிரகங்கள் தன்மையை வைத்து ஏற்படக்கூடிய சுபயோகத்தை இப்போது பார்க்கஷாம்.
சுக்கிரன், சந்திரன் சேர்ந்திருந்தால், நல்ல மனைவி, தனம் கிடைக்கும், புதன், சுக்கிரன் இருந்தால் - சரீரசுகம் பெற்றவராக இருப்பார். மனைவி அழகானவளாக, நல்லவளாகக் கிடைப்பாள். சூரியன், சுக்கிரன், சனி, இருந்தால்-தான், தருமங்கள் செய்வதில் நாட்டமிருக்கும்.
அதிகமான காம உணர்வும் தோன்றும். சுக்கிரன், புதன், சந்திரன் இருந்தால், கௌரவமான வாழ்க்கை கிடைக்கும். சுக்கிரன், சந்திரன், சனி, இருந்தால் வேத விற்பன்னராக இருப்பர். குரு, சுக்கிரன், சந்திரன் இருந்தால், பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருப்பர். நற்குணங்களும் இருக்கும். சுக்கிரன், குரு செவ்வாய் இருந்தால் பெரும் புகழ் கிட்டும்.
அரசின் ஆதரவும் இருக்கும். சுக்கிரன், சந்திரன், சனி இருந்தால் செல்வம் செல்வாக்கு கிட்டி, சுக போக வாழ்க்கையும் கிட்டும். சுக்கிரன், புதன், சந்திரன் இருந்தால் தலைவனாகும் நிலை அல்லது தலைமைப் பதவியை வகிக்கும் நிலை உண்டாகும். சுக்கிரன், குரு, புதன், இருந்தால் அதிகப் பொருள் வரவு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நல்ல மனைவி போன்றவைகள் கிடைக்கும்.
சுக்கிரன், புதன், சனி இருந்தால் - பொன், பொருள் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இருக்கும். சுக்கிரன், குரு, சனி இருந்தால், சகல வசதிகளும் பெற்று, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர எப்போதும் ஆட்கள் காத்துக்கிடப்பார்கள்.
குரு, சுக்கிரன் இருந்தால் - நல்ல புத்தியோடு பகையை வெல்லும் சாமர்த்தியமும் இருக்கும். சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் அழகுடையவராக இருப்பார். பலருக்கு நியாயம் சொல்லும் நீதிபதியாகவும் இருப்பார்.
சுக்கிரன், குரு, செவ்வாய், சந்திரன் இருந்தால் சகஷ காரியங்களிலும் கெட்டிக் காரராகவும், தர்மவானாகவும் இருப்பர். சுக்கிரன், குரு, செவ்வாய், சனி, இருந்தால் உண்மையாக வாழ்பவராக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருப்பர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அம்மன் அருள் பழனிநாதன்
044-30201000
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.